தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
snehan marriage
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன், இரண்டாவது இடத்தை பிடித்தார்.
சமீபகாலமாக, அரசியல் மீது தீவிர கவனம் செலுத்தி வரும் சினேகன் உலக நாயகன் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். சென்னை வளசரவாக்கம் பகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும் இது தனக்கு ஒரு பாடமாக இருந்ததாகவும், தொடர்து மக்கள் சேவையில் ஈடுபடுவேன் என கூறி வந்தார்.
இந்நிலையில் திடீர் என சினேகனின் திருமண பேச்சு அடிபட்டு வந்த நிலையில், இவரது காதல் விவகாரமும் வெளியே வந்தது. சினேகனும், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகையுமான கன்னிகாவும், சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன், ஜூலை 29 ஆம் தேதி திருமணமும் பிரமாண்டமாக நடந்தது.
திருமணம் நடந்து முடிந்த கையேடு தன் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த சினேகன், படப்பிடிப்புக்காக தன்னுடைய மனைவியுடன் வெளியூருக்கு பறந்தார்.
தற்போது இளம் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சினேகன் - கன்னிகா ஜோடி, தங்களது பெயரை மாறி மாறி கையில் டாட்டூ குத்தி கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
தங்களுடைய காதல் திருமணத்தின் அடையாளமாக வலியை பொறுத்து கொண்டு இருவரும் டாட்டூ குத்திகொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சினேகன் தற்போது ’குறுக்குவழி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.