கடந்த 2013ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "தீயா வேலை செய்யணும் குமாரு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய கலை பயணத்தை ஆர்.ஜி பாலாஜி தொடங்கினார். தொடர்ச்சியாக "வல்லினம்", "வாயை மூடி பேசவும்", "வடகறி", "இது என்ன மாயம்" மற்றும் "எட்சன்" போன்ற திரைப்படங்களில் அவர் நடித்து வந்தாலும், "நானும் ரவுடி தான்" என்கின்ற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்தது. தொடர்ச்சியாக தமிழ் மொழியில் நல்ல பல படங்களில் நடித்து வந்த அவர், கடந்த 2019ம் ஆண்டு வெளியான "எல்கேஜி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்தும் வந்தார்.