காந்தாரா முதல் பாகம் இனிமே தான் வரப்போகுது.. அப்போ கடந்தாண்டு ரிலீஸ் ஆனது? ரிஷப் ஷெட்டி சொன்ன ஷாக்கிங் அப்டேட்

First Published Feb 7, 2023, 1:48 PM IST

சமீபத்தில் கொண்டாடப்பட்ட காந்தாரா படத்தின் நூறாவது நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, அதன் அடுத்த பாகம் குறித்து அறிவித்துள்ளார்.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி, இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. முதலில் கன்னட மொழியில் மட்டும் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு கர்நாடகாவில் அமோக வரவேற்பு கிடைத்ததை அடுத்து இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர். ரிலீஸான அனைத்து மொழிகளிலும் இப்படம் வசூலை வாரிக் குவித்தது.

வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த திரையுலகினரையும் வியப்பில் ஆழ்த்தியது. காந்தாரா படத்தின் வெற்றிக்கு பல்வேறு மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் பாராட்டுக்களை தெரிவித்தனர். குறிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ரிஷப் ஷெட்டியை தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு தங்க செயின் ஒன்றை பரிசாகவும் வழங்கினார்.

இதையும் படியுங்கள்... அந்த படத்துக்கு ஆஸ்கர் வேணுமா.. காரி துப்பினாலும் புத்தி வரலேல! பாலிவுட் இயக்குனரை வெளுத்துவாங்கிய பிரகாஷ்ராஜ்

காந்தாரா படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்கிற கேள்வி எழுந்து வந்தது. இதற்கு கிரீன் சிக்னல் காட்டிய அப்படத்தின் தயாரிப்பாளர் நிச்சயம் உருவாகும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், காந்தாரா படத்தின் நூறாவது நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே ரிலீஸ் ஆகிவிட்டதாக கூறி அதிர்ச்சி அளித்தார். அதாவது கடந்தாண்டு ரிலீஸ் ஆனது தான் காந்தாரா இரண்டாம் பாகமாம். தற்போது தயாராக இருப்பது அப்படத்திற்கு முந்தைய நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகும் படம். அதனால் அதுதான் காந்தாரா முதல் பாகமாக இருக்கும் என கூறினார். தற்போது ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2024-ம் ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் ரிஷப் ஷெட்டி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்...  மளமளவென வளர்ந்து... அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகாவின் மகள் தியா - வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

click me!