மும்பையை சேர்ந்தவரான நடிகை ஜோதிகா, முதலில் இந்தி படத்தில் தான் நடித்தார். பின்னர் 1999-ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஜோதிகா. முதல்படத்திலேயே திறமையாக நடித்து பாராட்டுக்களை பெற்ற ஜோதிகாவுக்கு அடுத்ததாக சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது.