கர்ப்பமாக இருக்கும் சிம்பு பட ஹீரோயின்...! முதல் முறையாக வெளியிட்ட புகைப்படம்..!

First Published Feb 28, 2021, 3:44 PM IST

பேரழகும் திறமையும் கொண்ட, ஆனால் ராசியில்லா நடிகை என்று பெயரெடுத்த ரிச்சா கங்கோபாத்தியாய் தனது வெளிநாட்டுக் காதலரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், விரைவில் குழந்தை பிறக்க உள்ள தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

கடந்த 2010 ஆம் ஆண்டு, 'லீடர்' என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய, பின் தமிழில் நடிகர் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் அறிமுகமானார்.
undefined
இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான எடிசன் விருது, விஜய் அவார்ட்ஸ், உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
undefined
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த 'ஒஸ்தி' படத்தில் நடித்தார். பின் ஒரு சில காரணங்களால் இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடிக்க வந்த வாய்ப்புகளையும் ஏற்கவில்லை.
undefined
ஆனால் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்த இவர் நீண்ட இடைவேளைக்கு பின் 'போலீஸ் டைகர்' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
undefined
பின்னர் திரையுலகில் இருந்தே விலகிய ரிச்சா கங்கோபாத்யாய, தன்னுடைய காதலர் ஜோ ஜோ லங்கேலா, என்கிற வெளிநாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
undefined
இவருக்கு திருமணம் ஆகி, இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது இவர் கர்ப்பமாக உள்ள தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் குழந்தைக்கு தாயாகி விடுவாராம் ரிச்சா... இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!