சனிக்கிழமை, இந்த விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ள ரேவந்த் ரெட்டி, தெலுங்கு திரையுலகம் இரக்கமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அர்ஜுன், தியேட்டரில் இருந்தபோது, பெண்ணின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டபோதும், அதுபற்றி அவர் அக்கறை காட்டவில்லை என்றும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.