ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அப்படத்தின் நாயகன் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்மீக பயணமாக இமயமலைக்கு கிளம்பினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் டேராடூன் சென்ற ரஜினிகாந்த், அங்கு 7 நாட்கள் தங்கி ஆன்மீக சுற்றுலா மேற்கொள்ள உள்ளார்.
24
அடிக்கடி இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினிகாந்த், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அங்கு செல்லாமல் இருந்தார். தற்போது அனைத்தும் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டதால் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இமயமலைக்கு சென்றிருக்கிறார் சூப்பர்ஸ்டார். அங்கு ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இமயமலையில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு செல்லும் ரஜினிகாந்த், அங்குள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு தியானம் செய்துள்ளார். அவர் ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் சிறப்புரையும் ஆற்றி இருக்கிறார். அதோடு அங்குள்ள ஆன்மீக குருக்களின் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கி இருக்கிறார் ரஜினி.
44
நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு வார ஆன்மீக பயணத்தை முடித்த பின்னர் சென்னை திரும்பும் ரஜினிகாந்த், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.