இரண்டு தலைமுறை ஸ்டண்ட் மாஸ்டர்களை களமிறங்கிய நெல்சன்..வேறலெவலில் ரெடியாகும் ஜெயிலர்..

First Published Aug 22, 2022, 5:16 PM IST

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் புகைப்படம் மூலம் தெரிவித்திருந்தது.

jailer

நயன்தாராவை கோலமாவு கோகிலா என்னும் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காட்டி இருந்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இதை அடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டார்க் காமெடிக்கு சொந்தக்காரரான இவர் சமீபத்தில் விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார். 

jailer

இந்த படத்திலும் வழக்கம் போல நாயகனை சிரிக்காமல் இருக்கும் ரோபோ போலவே நடிக்க வைத்திருந்தார். இதில் பூஜா ஹெக்டே நீண்ட நாளுக்கு பிறகு தமிழில் தோன்றியிருந்தார். பிரபல நட்சத்திரங்கள் நடித்திருந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

மேலும் செய்திகளுக்கு...திடீரென சென்னைக்கு விசிட் அடித்த ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன்..என்ன விஷயம் தெரியுமா?

jailer

ராணுவ வீரராக இருக்கும் நாயகன் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருந்தது. படம் நல்ல வசூலையே கண்டது. இதற்கிடையே படப்பிடிப்பின் போதே ரஜினிகாந்துடன் புதிய திட்டத்தில் இணைந்து விட்டார் நெல்சன் திலீப் குமார்.

மேலும் செய்திகளுக்கு...நயன்தாரா ரேஞ்சுக்கு கிளாமரில் அடிதூள் கிளப்பும் பிரியா பவானி சங்கர்

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் நெட்வொர்க் வெளியிட்டு இருந்தது. அதோடு இதில் நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் தான் இசையமைக்கிறார். ரஜினிகாந்த், நெல்சன் மூவரும் இடம் பெற்றிருந்த வீடியோ கிளிப்பை வெளியிட்டு இந்த திட்டத்திற்கான செய்தியை உறுதி செய்திருந்தது தயாரிப்பு நிறுவனம்.

jailer

இதை அடுத்து ரஜினியின் 169 வது படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. முன்னதாக ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். கலவையான விமர்சங்களை சந்தித்த இந்த படத்தை அடுத்து ஆக்சன் திரில்லருக்காக நெல்சனுடன் கைகோர்த்துள்ளார் சூப்பர் ஸ்டார்.

மேலும் செய்திகளுக்கு...கிளாமர் லுக்கிற்கு பழகும் சூர்யா பட நாயகி அபர்ணா பாலமுரளி..க்யூட் போட்டோஸ் இதோ

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் புகைப்படம் மூலம் தெரிவித்திருந்தது. அதில் ஸ்டைலாக ரஜினி நிற்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில்  ஆக்சன் திருவிழாவாக உருவாக உள்ள ஜெயிலர் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

jailer

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சிவா மற்றும் அவரது மகன்கள் ஹெவின் மற்றும் ஸ்டீபன் ஆகிய மூவரும் இணைந்து இந்த படத்திற்கு ஆக்சன் சீக்வென்சை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதற்கான  புகைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் இயக்குனர் நெல்சன் இடம் பெற்றுள்ளார்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் பிரியங்கா மோகன் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. படையப்பாவில் நடித்த ரம்யா கிருஷ்ணன் 20 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!