நடன இயக்குனராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தவர் ஜாபர். இவர் முதன்முதலில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தது பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி தொடரின் மூலம் தான். அதில் விக்னேஷ் சிவன் இயக்கிய குறும்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார் ஜாபர். அந்த ஆந்தாலஜி தொடரில் ஜாபரின் நடிப்பை பார்த்து வியந்து போன கோலிவுட் இயக்குனர்கள் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளை வழங்கினர்.