Coolie Movie : ரஜினியின் கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

Published : Aug 12, 2025, 09:38 PM IST

Rajinikanth Coolie Gets Special Shows :ரஜினிகாந்தின் கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

PREV
13
கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

Rajinikanth Coolie Gets Special Shows :2025ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ரஜினிகாந்தின் கூலி படமும் ஒன்று. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் வரும் 14ஆம் தேதி நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் காம்பினேஷனில் திரைக்கு வரும் 4ஆவது படம்.

இதற்கு முன்னதாக லியோ, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்கள் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 4ஆவதாக கூலி படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெசி, காளி வெங்கட், ஜூனியர் எம்ஜிஆர் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அமீர் கான் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

23
ரஜினிகாந்த் கூலி படம்

கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கு திரையரங்கு வியாபாரம் செய்துள்ளது. அதோடு ரூ.120 கோடிக்கு அமேசான் நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியுள்ளது. இதன் மூலமாக படம் வெளியாவதற்கு முன்னரே கூலி இத்தனை கோடி லாபம் கொடுத்த நிலையில் படம் வெளியான பிறகு எப்படியும் உலகம் முழுவதும் கூலி படத்தின் வசூல் ரூ.1000 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

33
கூலி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி

இந்த நிலையில், கூலி படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. படம் வெளியாகும் ஆகஸ்ட் 14-ம் தேதியன்று சிறப்புக் காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதோடு ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கும் முன்னதாக கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories