கடைசி பட இயக்குனரை தேர்வு செய்த ரஜினிகாந்த்! கமுக்கமாக கொடுக்கப்பட்ட அட்வான்ஸ்? சீக்ரெட் காக்க இது தான் காரணமா

First Published Mar 26, 2023, 1:32 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கடைசி படத்தை யார் இயக்க வேண்டும் என முடிவு செய்து விட்டதாகவும், அதற்கான வேலைகள் சீக்ரெட்டாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 

Image credit: PTI

தமிழ் சினிமாவில் கடந்த ஓரிரு நாட்களாகவே ரவுண்டடித்து வரும் செய்திகளில் ஒன்று, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தலைவரின் கடைசி படத்தை இயக்குகிறார் என்பது. பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... இயக்குனர் ஒருவரின் படத்தை புகழ்ந்து பாராட்டினால் கூட, ரஜினி தன்னுடைய அடுத்த படத்தை அந்த இயக்குனர் இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என செய்திகள் கிளம்பிவிடுவது வழக்கம்.
 

இப்படி பல இயக்குனர்கள் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என செய்திகள் வெளியாகி பின் அது வதந்தியாகவும் கடந்து போயுள்ளது. அந்த வகையில் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்கிறார் என்கிற செய்தும் பார்க்கப்பட்ட நிலையில், அலசி ஆராந்து விசாரித்தபோது... தான் இது வதந்தி இல்லை, உண்மை தான் என தெரியவந்துள்ளதாகவும், இப்படம் குறித்த வேலைகள் சீக்ரெட்டாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவுக்கு 40 வயசுனு சொன்ன யார் நம்புவா? 20 வயது யங் ஹீரோவை போல் ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய போட்டோஸ்!

இந்த படம் குறித்த தகவல் வெளியே கசிந்துவிடாமல் மெயின்டெய்ன் செய்ய முக்கிய காரணம் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் லியோ திரைப்படம் தான். ஆம், விஜய்க்கு கோலிவுட் திரையுலக ரசிகர்கள் மத்தியில் செம்ம மாஸ் இருந்தாலும், ரஜினிக்கு இந்தியாவை தாண்டி வரவேற்பு உள்ளது. ரஜினி - லோகேஷ் படம் பற்றிய தகவல் வெளியானால் லியோ படம் குறித்த எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்பதால் தான், ரஜினி மற்றும் லோகேஷ் தரப்பில் இருந்து இப்படம் குறித்து மூச்சு கூட விடவில்லை என கோடம்பாக்கம் ஏரியாவில் பேச்சு அடிபட்டு வருகிறது.

மேலும் லோகேஷ் கனகராஜியிடம் தானாக வலியவந்து கால்ஷீட் கொடுத்தது மட்டும் இன்றி, இந்த படத்தை தயாரிக்க உள்ள நிறுவனத்திடம், லோகேஷுக்கு சம்பளமாக ரூபாய் 35 கோடி பேசி முடித்து, அதற்கான அட்வான்சும் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டதாம். எனினும் இப்போதைக்கு இந்த படம் குறித்த, தகவல் வெளியே வராது என்பது மட்டும் உறுதி.

5 லட்சம் தரேன் அந்த இடத்தை காட்டு.. கேன்சரால் அவதிப்படும் 'அங்காடி தெரு' சிந்துவுடம் கொச்சையாக பேசிய நபர்!
 

இந்த படத்தின் கதை குறித்து வெளியாகியுள்ள தகவலில், விக்ரம் படம் இயக்குவதற்கு முன்பாகவே ரஜினிக்கு என்று, லோகேஷ் ஒரு மாஸ் கதை நிறை தயார் செய்து வைத்திருந்தகாகவும், இந்த படத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டால் கமல்ஹாசனே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்தார். மேலும் இப்படம் குறித்து லோகேஷை அழைத்து சென்று, கமல் ரஜினியை சந்தித்த நிலையில் அப்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரஜினி நடிக்க வில்லை.
 

ஆனால் அந்த கதையை விட மனமில்லாமல், மீண்டும் அதே கதையை தூசு தட்ட சொல்லி ரஜினி இந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். அதே நேரம், இது தான் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பல முறை இது போன்ற தகவல் வெளியானாலும், ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதையும் நாம் பார்த்து தான் வருகிறோம்.
 

click me!