Published : Jul 11, 2025, 05:04 PM ISTUpdated : Jul 11, 2025, 06:04 PM IST
raji supports kathir in pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதில் டிராவல்ஸ் தொடங்க வங்கி லோனுக்கு முயற்சி செய்யும் நிலையில், அதற்கு ஆதரவாக இருக்க ராஜீயும் முடிவு செய்துள்ளார்.
raji supports kathir in pandian stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலுக்கு அரசு வேலை கிடைத்த நிலையில் அடுத்ததாக கதிர் சொந்தமாக பிஸினஸ் செய்ய முயற்சி செய்து வருகிறார். ஏற்கனவே மீனா நான் வங்கி லோனுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். தொடர்ந்து கதிரும் தன் பங்கிற்கு எல்லா முயற்சிகளும் செய்திருந்த நிலையில் டிராவல்ஸ் தொடங்குவதற்கான எல்லா ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்றார். அவருடன் ராஜீயும் சென்றிருந்தார். அதில் ஒரு சின்ன விஷயம் ராஜீ வங்கிக்கு செல்லும் போது கண்ணன் திருடிச் சென்ற நகைகளை போலீஸ் மீட்டுக் கொடுத்த நிலையில் அதனை எடுத்துக் கொண்டு சென்றார்.
25
பாண்டியன் ஸ்டோர்ச் 2 சீரியல் இன்றைய எபிசோடு
ஆனால், வங்கியில் சூரிட்டி கேட்க, கதிர் மற்றும் ராஜீயிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. அவர்களுக்காக யாரும் முன்வரவும் மாட்டார்கள். இந்த சூழலில் ராஜீ தான் நகையை வைக்க முன் வர அதனை கதிர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மேலும் அந்த நகையை பழனிவேல் மாமாவிடம் கொடுத்து ராஜியின் வீட்டில் கொடுக்க சொல்லிவிட்டார். அதோடு அவர்களது காட்சி முடிந்தது.
35
மீனாவிற்கு ஆதரவாக வந்த செந்தில்
அதன் பிறகு செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில், செந்தில் ரூ.10 லட்சம் கொடுத்து வேலை வாங்கிய உண்மையையும், தன்னால், தனது அப்பாவிற்கு நேர இருந்த அவமானத்தையும் காப்பாற்றியது மீனா கொண்டு வந்த ரூ.10 லட்சம் தான். அவள் தான் அலுவலகத்தில் வங்கி லோனுக்கு ஏற்பாடு செய்து அதனை உங்களிடம் கொண்டு வந்து கொடுத்தார்.
45
கதிருக்கு ஆதரவாக வந்த ராஜீ
ஆனால், அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நானும் பணத்திற்காக எல்லா இடங்களிலும் முயற்சி செய்தேன். எங்கும் கிடைக்கவில்லை. யார் யாரிடமோ கேட்டேன். கடைசியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது. உங்களிடம் சொல்ல வந்த போது தான் மீனா பத்து லட்சம் பணத்தை கொண்டு வந்து கொடுத்தாள். நான் பணத்தை கொண்டு சென்று மீனாவின் அப்பாவிடம் கொடுத்து இந்த வேலையை வாங்கினேன்.
55
அரசு வேலைக்கு முயற்சி செய்ய நீங்கதான் காரணம்
நான் மீனாவின் அப்பா சொல்கிறார் என்பதற்கெல்லாம் இந்த அரசு வேலையை வாங்கவில்லை. உங்களுடைய டார்ச்சர், தொல்லை தாங்க முடியாமல் தான் இந்த அரசு வேலையை வாங்கினேன் என்று எல்லா உண்மையையும் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார். கடைசியில் இதற்கு அவரது அம்மாவிடமிருந்து ஒரு அறை தான் கிடைத்தது. மேலும், பாண்டியன் மற்றும் செந்திலுக்கு இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இறுதியில் செந்தில், பாண்டியனைப் பார்த்து நீங்க எல்லாம் ஒரு நல்ல அப்பாவே கிடையாது என்று சொல்லிவிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.