நெகிழ வைக்கும் எஸ்.பி.பி பற்றிய அரிய புகைப்படத்தை வெளியிட்டு... நலம் பெற உருகிய ராகவா லாரன்ஸ்..!

First Published Aug 15, 2020, 12:44 PM IST

பல படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ள பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 5ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
 

கொரோனா தொற்று, உறுதி செய்யப்பட்டதும், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட எஸ்.பி.பி, தனக்கு லேசான காய்ச்சல், சளி தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தனக்கு மிகவும் குறைவான அளவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
undefined
மேலும் தன்னுடைய உடல் நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் தன்னை ஓய்வில் இருக்க சொல்லியுள்ளதால் யாரும் எனக்கு போன் செய்ய வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீடியோவில், மிகவும் தெளிவாக எந்த பதற்றமும் இன்றி அவர் பேசியதால் இவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
undefined
தனது வசீகர குரலால் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இன்றி பல படங்களில் எஸ்.பி.பி நடித்துள்ளார். இவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களையும் பிராத்தனைகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
undefined
அந்த வகையில் தற்போது, பிரபல நடிகரும் இயக்குனருமான, எஸ்.பி.பி.பாலா சுப்பிரமணியம், குறித்து மனம் உருக வைக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து, நெகிழ்ச்சியான தகவல்களை தெரிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "எஸ்.பி. சேவையும் நல்ல இதயமும் அவரைக் காப்பாற்றும். நானும் எனது குழந்தைகளும் ராகவேந்திர சுவாமியிடம் அவர் உடல் நலத்துடன் திரும்பி வர பிராத்தனை செய்கிறோம். எல்லோரும் தயவுசெய்து அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் ".
undefined
அவர் தன்னுடைய ஆசிரமத்தில் கடந்த 7 வருடங்களுக்கு முன், குழந்தைகளுக்கு தன கைகளாலேயே உணவு வழங்கி, ஆசிர்வாதம் செய்த புகைப்படங்களையும் இத்துடன் பகிர்ந்துள்ளார்.
undefined
click me!