இப்படம் மலையாளத்தில் நடிகர் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான மணிச்சித்திரத்தாழு என்கிற படத்தில் ரீமேக் ஆகவே எடுக்கப்பட்டது. 'சந்தரமுகி' படம் வெளியாகி 17ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் பி.வாசு கடந்த சில வருடங்களாகவே முயற்சி செய்து வருகிறார். முதலில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை ரஜினிகாந்திடம் கூற அவர் ஒரு சில காரணங்களால், இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.