மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற பிரபல நடிகர்... உருக்கமான அறிவிப்பு...!

First Published Mar 22, 2021, 6:48 PM IST

முதல் ஆளாக நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
 

ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக்காற்று, பில்லா 2, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்து காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தீப்பெட்டி கணேசன்.
undefined
தன்னுடைய குள்ளமான உடல்வாகையே தனக்கு ப்ளஸாக மாற்றி, நடிப்பில் முன்னேறி வந்த தீப்பெட்டி கணேசனுக்கு நாளடைவில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டார். சிறு சிறு வேலைகளை செய்து குடும்பத்தை நடத்தி வந்த தீப்பெட்டி கணேசனுக்கு கொரோனா லாக்டவுன் பேரிடியாக அமைந்தது.
undefined
கடந்த கொரோனா லாக்டவுனின் போது நடிகர் விஷால், பிரேம் குமார், ஸ்ரீமன், போன்ற நடிகர்கள் தன்னுடைய வீடு தேடி வந்து உதவியதாக கூறின
undefined
பால் வாங்க கூட காசு இல்லை என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டதை அடுத்து கவிஞர் சினேகன் அவருடைய வீட்டிற்கே சென்று உதவினார்.
undefined
உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். தீப்பெட்டி கணேசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வறுமையில் வாடும் அவருடைய குடும்பத்திற்கு உதவ வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
undefined
இந்நிலையில் முதல் ஆளாக நடிகர் தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
undefined
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ், ‘நடிகர் 'தீப்பெட்டி' கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இயன்றவறியலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொன்று செய்தேன் இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற அளவிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
undefined
click me!