பாலிவுட்டில் சுஷாந்துக்கு நடந்த கொடுமை... தமிழில் சிவகார்த்திகேயனுக்கும் நடந்துச்சு - பகீர் கிளப்பிய பிரபலம்

First Published May 25, 2022, 10:18 AM IST

sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி பிடிக்காமல் அவருக்கு பலர் குடைச்சல் கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக இருந்த சிவகார்த்திகேயன், பின்னர் தொகுப்பாளராக விஜய் டிவியில் அறிமுகமாகி கலக்கினார். இவர் தொகுத்து வழங்கிய அது இது எது, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் சூப்பர் ஹிட் அடித்ததால், அவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தனுஷின் 3 படம் மூலம் நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயன், மெரினா படம் மூலம் ஹீரோவானார்.

இதையடுத்து எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என குறுகிய காலத்தில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான டாக்டர் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.

இதையடுத்து இவர் நடித்த டான் படம் கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீசானது. இப்படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடியை நெருங்கி வருகிறது. இதன்மூலம் ரஜினி, விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்துக்கு உயர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சி பிடிக்காமல் அவருக்கு பலர் குடைச்சல் கொடுத்ததாக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபாரமானது. குறுகிய காலத்திலேயே அவர் முன்னணி நடிகராக உயர்ந்ததால், அவரது வளர்ச்சில் சிலருக்கு பிடிக்காமல் போனது. பல வழிகளில் அவருக்கு பிரச்சனை கொடுத்தனர்.

கிட்டத்தட்ட பாலிவுட்டில் சுஷாந்த் சிங்கிற்கு நடந்த கொடுமையை போலவே, இங்கு சிவாவுக்கு நடந்தது. அவர் படித்தவர், விவரமானவர் என்பதால் அதனை நன்றாக கையாண்டார். சிவகார்த்திகேயனுக்கு நடந்ததைப் போல் வேறு எந்த நடிகரும் அத்தகையை கொடுமைகளை சந்தித்ததில்லை” என தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Atlee : விஜய்க்காக மீண்டும் பிகில் கதையை கையிலெடுக்கும் அட்லீ... அவரே சொன்ன வெறித்தனமான அப்டேட்

click me!