சமந்தா குடும்ப வாழ்க்கையில் கும்மியடித்தது இவரா? நாக சைத்தாயா விவாகரத்துக்கு பின் உண்மையை உடைத்த ப்ரீத்தம்!

Published : Aug 09, 2024, 11:26 PM IST

நாக சைதன்யா - சமந்தாவின் விவாகரத்துக்கான காரணம் குறித்து, தற்போது சமந்தாவின் நண்பர் போட்டுள்ள பதிவு மூலம் தெரிய வந்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.  

PREV
18
சமந்தா குடும்ப வாழ்க்கையில் கும்மியடித்தது இவரா? நாக சைத்தாயா விவாகரத்துக்கு பின் உண்மையை உடைத்த ப்ரீத்தம்!
samantha Friend Preetam

நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா நிச்சயதார்த்தத்தை அடுத்து, சமந்தாவின் நண்பர் ப்ரீதம் ஜுகல்கர் போட்டுள்ள பதிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
 

28
Samantha - Naga Chaitanya Divorce

நடிகை சமந்தாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, கடந்த 2021-ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்கள் இருவரின் பிரிவுக்கு காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவியது.
 

38
Samantha Faced Problems:

குறிப்பாக குடும்ப பாரம்பரியத்தை, கட்டுப்பாடுகளை மதிக்கவில்லை, குழந்தை பெற்றுக்கொள்ள வில்லை என ஒரு தரப்பு குற்றச்சாட்டை முன் வாய்த்த நிலையில், இன்னொரு தரப்பினர் சமந்தா அவரின்  ஒப்பனையாளர் ப்ரீதம் ஜுகல்கருடன் உறவில் இருப்பதாக கூறி வதந்திகளை பரப்பினர்.
 

48
Samantha and preetham photos

 சமந்தா-ஜுகல்கர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக நிலையில், நாக சைதன்யா ரசிகர்கள் ப்ரீதத்தை குறிவைத்து தாங்கியபடி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
 

58
Preetham about samantha Relationship

இதற்க்கு ப்ரீத்தம், சமந்தா எனக்கு அக்கா மாதிரி. நாக சைதன்யாவுக்கும் எங்கள் உறவு எப்படி பட்டது என்பது நன்றாகவே தெரியும். தேவையில்லாமல் என்னை சர்ச்சைக்குள் இழுக்க வேண்டாம் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார். பின்னர் சில பிரபலங்கள் அதற்க்கு வாய்ப்பே இல்லை என்றும் ப்ரீத்தம் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
 

68
Naga Chaitanya-Sobhita Dhulipala

சமந்தாவும் ப்ரீதமுடன் தொடர்பு இருப்பதாக வந்த செய்தியை புறக்கணித்தார். அவருடன் தொடர்ந்து நட்பை பேணி வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி, நாக சைதன்யா-ஷோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில்... ப்ரீதம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
 

78
Preetham instagram post

ப்ரீதம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் கூறியுள்ளதாவது.. குட் லக் Sult (வேசி), இப்போது அவர் உங்களுடையவர். ரகசியங்களும் பொய்களும் உறவுகளை அழிக்கின்றன. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் பிடிபடும் என்று எழுதினார். இந்த கருத்துகள் நாக சைதன்யா மற்றும் ஷோபிதாவை குறிவைத்து தான் ப்ரீத்தம் மறைமுகமாக சாடி உள்ளதாக ஒரு கருத்து பரவி வருகிறது.
 

88
Preetham About Truth:

இதன் மூலம் சமந்தா - நாக சைதன்யா வாழ்க்கையில் கும்மியடித்தது ஷோபிதா தானா என்றும், சமந்தாவை விவாகரத்து செய்யும் முன்னரே நாக சைதன்யா சோபிதாவுடன் தொடர்பில் இருந்தாரா? என பல கேள்விகள் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வருகின்றன. அதே நேரம் சமந்தா வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக ப்ரீதாமுக்கு தெரியும்.. காரணத்தோடு தான் அவர் இந்த பதிவை போட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.

click me!

Recommended Stories