வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்கு பின் அப்படம் ஓடிடியில் வெளியிடப்படும். அந்த வகையில் போர் தொழில் படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் தியேட்டரில் நன்கு வரவேற்பை பெற்று வருவதால், அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைக்குமாறு தயாரிப்பு தரப்பில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓடிடி நிறுவனமும் அப்படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளது.