கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய “பொன்னியின் செல்வன்”... ஷூட்டிங் குறித்து சுடச்சுட வெளியான தகவல்...!

First Published Jan 4, 2021, 5:35 PM IST

இதனிடையே அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் உஷாரான மணிரத்னம் படத்தில் நடிப்பவர்கள் அனைவருமே டாப் ஸ்டார்கள் என்பதால் அவர்களுடைய வீடுகளுக்கே மருத்துவர்கள் குழுவை அனுப்பி கொரோனா பரிசோதனை செய்துள்ளாராம். 

​கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற ஆரம்பித்தது.
undefined
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, லால், ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. அங்குள்ள அடந்த வனப்பகுதியில் பிரம்மாண்ட அரண்மனை போல் செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்தது. ஆனால் இந்த கொடூர கொரோனா மணிரத்னத்தின் கனவில் மண்ணை வாரிப்போட்டது.
undefined
உலகம் முழுவதும் தீயாய் பரவிய கொரோனா தொற்றிலிருந்து தப்பிப்பதற்காக ஷூட்டிங்கை ரத்து செய்த படக்குழு அடித்து பிடித்து தாயகம் வந்து சேர்ந்தது. ஏற்கனவே லைகாவின் பெரிய பட்ஜெட் படமான இந்தியன் 2 கைவிடப்பட்டதாக அவ்வப்போது வதந்திகள் பரவி வந்த நிலையில், பொன்னியின் செல்வன் படமும் ட்ராப் ஆகிவிட்டதாக வதந்திகள் பரவின.
undefined
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் படத்தை கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என்பதில் மணி ரத்னத்தை விட உறுதியாக உள்ளதாம். தற்போது கொரோனா கால கெடுபிடிகள் எல்லாம் குறைந்துள்ள நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
undefined
இதனிடையே அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனால் உஷாரான மணிரத்னம் படத்தில் நடிப்பவர்கள் அனைவருமே டாப் ஸ்டார்கள் என்பதால் அவர்களுடைய வீடுகளுக்கே மருத்துவர்கள் குழுவை அனுப்பி கொரோனா பரிசோதனை செய்துள்ளாராம்.
undefined
அதேபோல் இலங்கையில் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே 3 பிரம்மாண்ட செட்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம். இந்நிலையில் ஜனவரி 6ம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் நட்சத்திர பட்டாளங்களுடன் தொடங்க உள்ள பொன்னியின் செல்வன் படத்தை ஓட்டுமொத்த திரையுலகமே உற்றுநோக்கி வருகிறது.
undefined
click me!