trisha - vijay
தற்போது மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார் திரிஷா. இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. திரிஷாவின் முந்தைய காதல் வாழ்க்கை குறித்து பார்க்கலாம். முன்னதாக கில்லி படத்தில் நடித்த போது விஜயுடன் திரிஷா கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அமுங்கி போனது.
trisha
அதையடுத்து ராணா டக்குபதியுடன் இவருக்கு காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. பல இடங்களிலும் இவர்கள் ஒன்றாக திரியும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன.ராணா டக்குபதி உடன் இணைந்து இருவரின் உறவு மிகவும் பிரபலமடைந்தது. அவர்களின் விவகாரம் நீண்ட காலம் தொடர்ந்தது. மற்றும் இருவரும் முத்தமிட்ட அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் கசிந்தன. அவர்கள் இடையேயான உறவு மேலும் வேகம் பெற்றது. இந்த புகைப்படங்களை தென்னிந்த வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் அந்த விவகாரமும் காணாமல் போனது.
மேலும் செய்திகளுக்கு...சமுத்திர குமாரி ஐஸ்வர்யா லட்சுமியின் கட்டுடல் மேனிக்கு காரணம் என்ன தெரியுமா?
39 வயதான த்ரிஷா கிருஷ்ணன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரிகள் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்தம் முடிந்த ஐந்து மாதங்கள் ஆன பின்னர் திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகளை வெளியிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என சொல்லப்பட்டது. இருவரும் பழகுவது வருணுக்கு பிடிக்காததால் நிச்சயதார்த்தத்தை நிறுத்தினராம்.
மேலும் செய்திகளுக்கு...அக்டோபர் மாதம் ஓடிடி -யில் வெளியாகவுள்ள புது படங்களின் லிஸ்டை பார்ப்போம்
மேலும் சிம்புவுடன் த்ரிஷா கிசுகிசுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு திரிஷாவும் சிம்புவும் ஒருவரை ஒருவர் டேட்டிங் செய்ததாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அப்படி எதுவும் கிடையாது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என குறிப்பிட்டனர். முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Trisha
சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது திருமணம் குறித்து பேசி இருந்த திரிஷா. தன்னை முழுமையாக புரிந்து கொண்ட ஒருவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், அப்படி ஒருவர் கிடைக்காவிட்டால் தான் கன்னியாகவே இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.