லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா அவர் வாழ்க்கையில் வந்ததில் இருந்தே அதிர்ஷ்ட காத்து வீச துவங்கி விட்டது என்று கூறலாம்.
மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்னர், நடிகர் ஜெயம் ரவி, ஜெயராம், ஆகியோருடன் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியது.
45
அதேபோல் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ள 'சன்னிதானம் PO' என்கிற படத்தின் பூஜையில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். ஒரு வழியாக சபரிமலைக்கு சென்று வந்துள்ள விக்னேஷ் சிவன், தற்போது தன்னுடைய மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொங்கல் ஸ்பெஷலாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா மிகவும் மங்களகரமாக வகுடில் குங்குமம், தலையில் பூ வைத்து சல்வார் அழகில் ஜொலிக்கிறார். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகள், இருவரின் மடியில் அழகாக படுத்துள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே பலர் தாறுமாறாக தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.