சபரிமலைக்கு சென்று வந்த கையேடு... நயன்தாரா தோளில் சாய்ந்து கொண்டு இரட்டை குழந்தையோடு போஸ் கொடுத்த விக்கி!

First Published Jan 16, 2023, 6:21 PM IST

சபரிமலைக்கு சென்று வந்த கையோடு, காதல் மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா அவர் வாழ்க்கையில் வந்ததில் இருந்தே அதிர்ஷ்ட காத்து வீச துவங்கி விட்டது என்று கூறலாம்.

இவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருவதோடு, சில திரைப்படங்களை தாயாரித்தும், விநியோகம் செய்தும் வருகிறார். பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்து..! விஜய் ஆன்டனி படுகாயம் அடைந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு!

மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்னர், நடிகர் ஜெயம் ரவி, ஜெயராம், ஆகியோருடன் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியது.

அதேபோல் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ள 'சன்னிதானம் PO' என்கிற படத்தின் பூஜையில் கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார். ஒரு வழியாக சபரிமலைக்கு சென்று வந்துள்ள விக்னேஷ் சிவன், தற்போது தன்னுடைய மனைவி நயன்தாரா மற்றும் இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பொங்கல் ஸ்பெஷலாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. மஞ்சள் நிற பட்டு புடவையில் பொங்கல் பிரபல ஹீரோயினுடன் பொங்கல் வைத்த கீர்த்தி சுரேஷ்!

நயன்தாரா மிகவும் மங்களகரமாக வகுடில் குங்குமம், தலையில் பூ வைத்து சல்வார் அழகில் ஜொலிக்கிறார். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகள், இருவரின் மடியில் அழகாக படுத்துள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே பலர் தாறுமாறாக தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

click me!