இவ்வளவு பெரிய தொகைக்கு நிலம் வாங்கினால் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக, வங்கியில் கடன் வாங்கி அதன்மூலம் நிலம் வாங்கியுள்ள ஈஸ்வரி, அந்த கடனை இரண்டே வருடத்தில் அடைத்து இருக்கிறார். ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து திருடிய நகைகளை எல்லாம் சென்னை மைலாப்பூரில் உள்ள தனியார் நகைக்கடையில் ஈஸ்வரி விற்பனை செய்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இதையடுத்து நகைகளை விற்று அதன்மூலம் ஈஸ்வரி வாங்கிய சொத்துக்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஈஸ்வரியிடம் இருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடம் இருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்து, அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மீண்டும் தமிழ் படங்களில் பிஸியான நடிகை விருமாண்டி அன்னலட்சுமி! படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்!