விதி மீறல் ..நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார்..

Published : Oct 15, 2022, 10:54 AM ISTUpdated : Oct 15, 2022, 03:12 PM IST

இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

PREV
15
விதி மீறல் ..நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார்..

நயன்தாரா விக்னேஷ் சிவனின் வாடகைத்தாய் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏழு வருட காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நானும் ரவுடிதான் படத்தலத்தில் ஏற்பட்ட காதலை காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தோடு முடித்துக் கொண்டு மண வாழ்க்கையை துவங்கி விட்டனர்.

25

இரண்டு முறை ஹனிமூன் சென்று திரும்பிய இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து தற்போது இருவரும் அவரவர் பணியில் பிசியாகி விட்டனர். விக்னேஷ் சிவன் ஒலிம்பியாட் துவக்க விழாவை சிறப்பாக நடத்தி முடித்ததையடுத்து அஜித்தின் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். அதேபோல நயன்தாரா தற்போது ஜவான் மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படம் என தொடர்ந்து படப்பிடிப்புகள் இணைந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நடிகர் 'ராபி கோல்ட்ரேன்' காலமானார்..

35

4 மாத திருமண பந்தத்தில் இவர்களது புகைப்படங்கள் வெளியாகாத நாளே இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் திடீரென இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டோம் என்கிற பதிவை வெளியிட்டு இருந்தனர். குழந்தைகளின் பாதத்துடன் இவர்கள் வெளியிட்டிருந்த பதிவில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தை தாயாகியுள்ள விஷயத்தை கூறியிருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. அதோடு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்த கேள்விகளும் எழுத்தது.

45

இந்தியாவில் வாடகைத்தாய்க்கு கட்டுப்பாடுகள் இருக்கைகள் திருமணமாகி  நான்கு மாதங்களே ஆகும் நிலையில் இவர்கள் எவ்வாறு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்கள் என்கிற  கண்டனங்கள் உருவாகியது. முன்னதாக இவர்கள் லிவ்விங் டு கெதரின் இருந்தது குறித்தும் சர்ச்சை கிளம்பியது. தமிழா அரசு வாடகைத்தாய் விவகாரம் குறித்து விசாரணையும் மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...NC 22 : மாநாடு படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் NC 22-ல் இணைந்தார் பிரேம்ஜி

55

இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார். இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories