7500க்கும் மேற்பட்ட பாடல், கவிதைகள் எழுதிய வைரமுத்துவின் நிகர சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Published : Jul 13, 2025, 06:26 PM ISTUpdated : Jul 13, 2025, 06:33 PM IST

Vairamuthu Net Worth in Tamil : கவிஞர் வைரமுத்து இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் வைரமுத்து ராமசாமி

Vairamuthu Net Worth in Tamil : கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர் என்று பன்முக கலைஞராக திகழும் வைரமுத்துவின் இயற்பெயர் வைரமுத்து ராமசாமி. கடந்த 1953 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மதுரையில் உள்ள மேட்டூரில் பிறந்தார். சென்னை பச்சையப்பா’ஸ் கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்றார். முதுகலை பட்டம் முடித்த வைரமுத்து சினிமாவில் எண்ட்ரி ஆவதற்கு முன்னதாக டிரான்ஸ்லேட்டராக பணியாற்றியுள்ளார். அதே கவிஞராகவும் இருந்தார். முதன் முதலாக இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

25
இது ஒரு பொன் மாலை

இந்தப் படத்தில் இடம் பெற்ற இது ஒரு பொன் மாலை என்ற பாடலுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்துள்ளார். சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரையில் 7500க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார். இதில், 7 தேசிய விருதுகளும் வென்றுள்ளார். இதுவரை எந்த இந்திய பாடலாசிரியரும் இவ்வளவு தேசிய விருதுகள் வென்றதில்லை என்று கூறும் அளவிற்கு 7 தேசிய் விருதுகளை வென்று குவித்துள்ளார். அதுமட்டுமின்றி இலக்கியத்தில் அவரது தொன்றிற்காக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.

35
வைரமுத்துவின் நிகர சொத்து

இப்படி பல சாதனைகளை நிகழ்த்திய வைரமுத்துவின் நிகர சொத்து மதிப்பு எத்தனை கோடி என்பது குறித்து தெரிந்து கொள்வோம். கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் இப்போது வரையில் 45 ஆண்டுகள் சினிமாவில் பணியாற்றி வரும் வைரமுத்துவின் நிகர சொத்து மதிப்பு குறித்து பலவாறான கூற்றுகள் இருக்கும் நிலையில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி வைரமுத்துவின் நிகர சொத்து மதிப்பு ரூ.300 கோடி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் அவரது வருமான ஆதாரம் தமிழ் திரைப்பட துறையில் ஒரு பாடலாசிரியராகவும், கவிஞராகவும் பணியாற்றுவதற்கு என்று தகவல் தெரிவிக்கின்றது. இதுதவிர அவர் ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின் மூலமாகவும் வைரமுத்துவிற்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

45
வைரமுத்து வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள்:

வைரமுத்துவின் வளர்ச்சியில் இளையராஜாவின் பங்கும் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட வைரமுத்துவின் சினிமா வாழ்க்கையில் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர்களது பிரிவுக்கு பிறகு 5 ஆண்டுகள் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட மற்ற மொழி படங்களுக்கான பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்தார்.

சந்திரபோஸ் அறிமுகம்:

இளையராஜா உடனான பிரிவுக்கு பிறகு இசையமைப்பாளர் சந்திரபோஸின் அறிமுகம் கிடைத்தது. அப்போது சந்திரபோஸ் மற்றும் வைரமுத்து இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அப்படி அவர்கள் இருவரும் இணைந்து சங்கர் குரு, மக்கள் என் பக்கம், மனிதன், கதா நாயகன், தாய்மேல் ஆணை, பாட்டி சொல்லை தட்டாதே, வசந்தி, ராஜா சின்ன ரோஜா, சுகமான சுமைகள், ஆதிக்கம் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளனர். இதில் ஆதிக்கம் படம் தான் இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம். இந்தப் படம் 2005ல் வெளியானது.

55
வைரமுத்துவிற்கு மறுமலர்ச்சி

இயக்குநர் கே பாலசந்தர் தனது வானமே எல்லை, அண்ணாமலை மற்றும் ரோஜா ஆகிய 3 படங்களுக்கு வைரமுத்துவை பாடலாசிரியராக ஒப்பந்தம் செய்தார். இதில் வானமே எல்லை என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார். இந்தப் படத்தில் கீராவாணி இசையமைப்பாளராக பணியாற்றினார். அண்ணாமலை படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்தப் படத்தில் தேவா இசையமைப்பாளராக பணியாற்றினார். கடைசியாக ரோஜா படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கினார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரோஜா படத்தில் இடம் பெற்ற சின்ன சின்ன ஆசை என்ற பாடல் தான் வைரமுத்துவிற்கு 2ஆவது தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 25 ஆண்டுகள் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் வைரமுத்துவின் காம்பினேஷனில் தான் ஏராளமான பாடல்கள் வெளியாகின. அதில் திருடா திருடா, பம்பாய், அலை பாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதன் பிறகு வைரமுத்துவின் சினிமா வாழ்க்கை புதிய உச்சம் தொட்டது

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories