தொடர்ச்சியாக 1949 ஆம் ஆண்டிலிருந்து 1980 களின் இறுதிவரை அவர் பல படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார். அண்மையில் கிடைத்த தகவலின்படி கடந்த 1982 ஆம் ஆண்டு பிரபல நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், இளையராஜா இசையில், பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான "மூன்றாம் பிறை" என்கின்ற திரைப்படத்தில் தான் தன்னுடைய இறுதி பாடல்களை கண்ணதாசன் எழுதியதாக கூறப்படுகிறது. குறிப்பாக "கண்ணே கலைமானே" என்கின்ற பாடல் தான் அவர், தன் வாழ்நாளில் எழுதிய இறுதி திரை உலக பாடல் என்றும் கூறப்படுகிறது.