நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமோக வெற்றியை பெற்றது. கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் டான் ஆக நடித்திருந்தார் சிம்பு. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை சிம்புவுக்கு பரிசாக வழங்கி இருந்தார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள பத்து தல படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. ஷூட்டிங் நிறைவு பெற்றதை அடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் சிம்பு. அதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதன்பின் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல உள்ளார் சிம்பு.
இந்நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளார். தர்பார் படத்துக்கு பின் கடந்த மூன்று ஆண்டுகளாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக சிம்புவை வைத்து சூப்பர்ஹீரோ கதையம்சம் கொண்ட படத்தை இயக்க தயாராகி வருகிறார். விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... விஜயகாந்த் படக்கதையை திருடி.. ஜவான் படத்துக்காக பட்டி டிங்கரிங் பார்த்தாரா அட்லீ? - விசாரணையில் வெளிவந்த உண்மை