வரவேற்பை பெற்று வரும் இரவின் நிழல்..கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

Published : Jul 21, 2022, 02:21 PM IST

இந்நிலையில் படத்தின் வசூல் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 2.5 கோடியும் உலகம் முழுவதும் 4.5 கோடியும் படம் வசூல் செய்துள்ளதாகவும் வரும் நாட்களில்  நல்ல வசூலை பெறும் என்றும் கூறப்படுகிறது.

PREV
13
வரவேற்பை பெற்று வரும் இரவின் நிழல்..கலெக்சன் எவ்வளவு தெரியுமா?
Iravin Nizhal

பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தற்போது தனது புதிய படைப்பாக இரவின் நிழல் திரையரங்குகளில் மிளிர  வைத்துள்ளார். முன்னதாக ஒத்த செருப்பு மூலம் உலக புகழ் பெற்ற பார்த்திபன் அதற்கான தேசிய விருதையும் வென்ற இவர் விரைவில் ஹாலிவுட் இந்த படம் உருவாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..மீடூ விவகாரம்... லீனா மணிமேகலை தாக்கல் செய்த பிரமாணப் பாத்திரம்! நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

 தற்போது  இவரின் இயக்கத்தில் இரவின் நிழல் சிங்கள் ஷாட் படமாக உருவாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் என கூறப்படுகிறது. நேரியல் அல்லாத ஒன்றை ஷாட் படமாக ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இரவின் நிழல்  இடம் பெற்றுள்ளது.

23
Iravin Nizhal

வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர்,  பிரியங்கா ரூத்,பிரிகிடா சாகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் சுயதீன திரில்லர் திரைப்படம் என்று கூறப்படுகிறது. நாயகன் தனது வாழ்வில் நடந்த இன்னல்கள் குறித்து சித்தரிப்பதாக இந்த படம் உருவாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஸ்டைல் வாக் போட்ட விஜய்..வாரிசு சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை லீக் செய்த ரசிகர்கள்..

காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் கதாநாயகன் முதலில் ஒரு போலி சாமியாரின் ஆசிரமம் மற்றும் பழடைந்த  மண்டபத்தில் தஞ்சம் அடைகிறார். அந்த மண்டபத்தில் இருந்தபடி தன் வாழ்வில் நடந்தவற்றை சிந்திக்கும் கதைகளத்தை இந்த படம் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 70 ஏக்கர் நிலப்பரப்பில் 56க்கும் மேற்பட்ட செட்கள் அமைக்கப்பட்டு ஒரே நேரத்தில் இந்த படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. 90 நாட்கள் ஒத்திவைக்கப் பிறகு உருவாகியுள்ளது இரவின் நிழல்.

33
Iravin Nizhal

ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.  இதற்கிடையே நாயகி பிரிகிடாவின் பேட்டி சர்ச்சையை உண்டாக்கியது. பின்னர் பார்த்தினும், நாயகியும் மாறி மாறி மன்னிப்பு கேட்டு வந்தனர். பிரச்சனை தற்போது மெல்ல மெல்ல அடங்கி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..இறுதி கட்டத்தில் குக் வித் கோமாளி 3..அந்த மூன்று வின்னர்ஸ் யார் தெரியுமா?

இந்நிலையில் படத்தின் வசூல் குறித்தான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தில் இதுவரை 2.5 கோடியும் உலகம் முழுவதும் 4.5 கோடியும் படம் வசூல் செய்துள்ளதாகவும் வரும் நாட்களில்  நல்ல வசூலை பெறும் என்றும் கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories