அதே சமயம் அந்த கருத்து ஏன் வெளிப்பட்டது என்பதையும் பார்த்திபன் விளக்கினார். “நிகழ்ச்சி இடைவேளையில் சமூக வலைதளங்களில் வந்த விமர்சனங்களைப் பார்த்தபோது, விஜய் அரசியலில் வளர்ந்து வரும் இந்த நேரத்தில் இத்தகைய சர்ச்சைகள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடுமோ என்ற கவலையே எனக்குள் இருந்தது. அந்த ஆதங்கத்தில்தான் அந்த வார்த்தை வந்துவிட்டது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “விஜய் அந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றதில் எனக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் த்ரிஷாவும் அவருடன் சென்றது சில ரசிகர்களிடம் எதிர்வினையை ஏற்படுத்தியதாக பேசப்பட்டது. த்ரிஷா அனுபவமுள்ளவர் என்பதால் அந்த தருணத்தில் வேறு விதமாக நடந்திருக்கலாம் என்ற கருத்தையே சிலர் வெளியிட்டனர். அதையே நான் அப்படியே வெளிப்படுத்திவிட்டேன்,” என்று தெரிவித்தார்.
இத்துடன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பார்த்திபன் விளக்கம் அளித்திருந்தாலும், அந்த வீடியோவை வெளியிட வேண்டாம் எனக் கூறி தனக்கு மிரட்டல் போன் கால் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அழைப்பு யார் மூலம் வந்தது என்ற கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.