சீரியலில் இருந்து விலகுகிறாரா “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா?... வெளியானது அதிரடி உண்மை...!

First Published Sep 18, 2020, 8:35 PM IST

குழந்தை பிறந்த காரணத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ஹேமா ராஜ்குமார் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் - தம்பி பாசத்தை அடிப்படை கதையாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கும், இதில் நடிக்கும் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
undefined
இதில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்.
undefined
இவர் இந்த சீரியலில் கர்ப்பமாக நடிக்க துவங்கிய ராசி, உண்மையிலேயே கர்ப்பமானார்.
undefined
சமீபத்தில் இவருக்கு வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நடைபெற்றது. அதேபோல் சீரியலிலும் ரீல் வளைகாப்பு சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டது.
undefined
கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹேமாவிற்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், ஏன் அதற்கு பெயரே வைத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
undefined
ஆனால் ஹேமாவிற்கு உண்மையிலேயே தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
undefined
குழந்தை பிறந்து விட்டதால், ஹேமா இந்த சீரியலில் இருந்து விலகுவார் என தகவல்கள் வெளியாகின. இதே கேள்வியை பலரும் ஹேமாவிடம் கேட்டுள்ளனர்.
undefined
எல்லோரும் இதே கேள்வியை கேட்கிறார்கள். அப்படி அல்ல, சீக்கிரமே உங்கள் அனைவருக்கும் ஒரு பாசீட்டீவான செய்தி காத்திருக்கிறது என கூறியுள்ளார். அது என்ன என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்க்கும் போது தான் தெரியும்.
undefined
click me!