மாடல், டான்சர் என பன்முக திறமைகளுக்கு சொந்தக்காரியான விஜே சித்ரா, ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
undefined
விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் பெரின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
undefined
இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவை லட்சக்கணக்கான ரசிகர்கள் பலரும் தங்களது பக்கத்து வீட்டு பெண் போல் பார்க்க ஆரம்பித்தனர். ஏனென்றால் அப்படியொரு பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
undefined
தொழிலதிபர் ஹேமந்த் ரவிஎன்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், இன்று அதிகாலை ஓட்டல் அறையில் தூக்கிட்டு விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.
undefined
சித்ராவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ராவிற்கு கணவனாக நடித்த குமரன் தனது இரங்கலை உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
undefined
உன் தைரியம் எல்லாருக்கும் தெரிந்தது. பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறாய். நீ திரும்ப போராடியிருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆனால் இது ஒரு போதும் பதிலாகாது என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
undefined