விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக ரசிகர்களை கவர்ந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். அண்ணன் - தம்பி சென்டிமெண்ட் உடன் வெளியாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம்.
undefined
இந்த சீரியலில் 10க்கும் மேற்பட்ட முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்கும் முதலில் பிடித்தது யார்? என்று கேள்வி கேட்டால், எல்லாரும் சொல்லும் ஒரே பெயர் விஜே சித்ராவாக தான் இருக்கும்.
undefined
ஆமாங்க... துறுதுறு குடும்ப பெண் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா தனது அழகாலும், அசத்தலான நடிப்பாலும் பலரையும் கவர்ந்திழுத்தவர்.
undefined
அதுமட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை ஜோடிக்கு என்றே லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு. இப்படி மக்கள் மனதை முல்லையாக ஆட்சி செய்த சித்ரா, இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
சித்ராவின் பிரிவை ஏற்க முடியாத ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் தன்னுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜே சித்ராவின் புன்னகை பூத்த புகைப்படங்கள் பலவற்றையும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.
undefined
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதனுடன் விஜே சித்ரா நடத்திய போட்டோ ஷூட் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
என்றும் மாறாத அதே புன்னகையுடன் விஜே சித்ரா, வெங்கட் உடன் போஸ் கொடுத்துள்ளதை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் கண் கலங்கும்.
undefined
தைரியமான பெண்ணாக, மார்டன் மங்கையாக வெளிவந்த சித்ராவா தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது பலராலும் நம்ப முடியாததாகவே இல்லை.
undefined