“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ரா தனது வருங்கால கணவருடன் வெளியிட்ட அசத்தல் போட்டோ... குவியும் லைக்ஸ்...!

First Published Sep 23, 2020, 3:44 PM IST

நிச்சயதார்த்தத்திற்கு பிறகு முதன் முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காதலுடன் வருங்கால இளம் தம்பதி புன்னகைத்துக்குக் கொள்ளும் அந்த போட்டோ லைக்குகளை அள்ளுகிறது.
 

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களிலேயே அதிகம் பெரின் கவனத்தை ஈர்த்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.
undefined
அண்ணன், தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சாதாரண குடும்பத்தின் கதையை அழகாக சொல்லும் இந்த சீரியல், தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் ஒளிபரப்பாகி வருகிறது.
undefined
இந்த சீரியலில் பல ஜோடிகள் இருந்தாலும் கதிர் - முல்லை ஜோடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
undefined
முல்லை கதாபாத்திரத்தில் தொகுப்பாளினி, நடிகை, மாடலிங் என பல்வேறு துறைகளில் கலக்கிய சித்ரா நடித்து வருகிறார்.
undefined
ஆரம்பத்தில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த சித்ரா, சன் டி.வியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
undefined
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முல்லைக்கு என இல்லத்தரசிகள் பலரும் ஆர்மியே ஆரம்பிக்கும் அளவிற்கு ஃபேனாக மாறிவிட்டார்கள்.
undefined
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவிற்கும் தொழிலபதிர் ஹேமந்த் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த போட்டோக்கள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.
undefined
இந்நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு முதன் முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காதலுடன் வருங்கால இளம் தம்பதி புன்னகைத்துக்குக் கொள்ளும் அந்த போட்டோ லைக்குகளை அள்ளுகிறது.
undefined
click me!