குடிப்பழக்கம் இருந்தது உண்மை தான்... மகன் தற்கொலை குறித்து மனம் திறந்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகை...!

First Published Oct 12, 2020, 6:58 PM IST

இவருக்கு சந்தோஷ் என்ற 35 வயது மகன் உள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் மகன் குடும்பத்தினருடன் சாந்தி வில்லியம்ஸ் வசித்து வந்தார். 
 

சன் தொலைக்காட்சியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த தொடர் மெட்டி ஒலி. அதில் வில்லத்தனமான மாமியாராக வந்து ஒட்டு மொத்த சீரியலையும் விறுவிறுப்பாக்கியவர் சாந்தி வில்லியம்ஸ்.
undefined
இடையில் சீரியலில் நடிக்காமல் இருந்து வந்த சாந்தி வில்லியம்ஸ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
undefined
இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற கேமராமேனாக வலம் வந்தவர். அவருடைய மரணத்திற்கு பிறகு குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் சாந்தி வில்லியம்ஸ்.
undefined
இவருக்கு சந்தோஷ் என்ற 35 வயது மகன் உள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் மகன் குடும்பத்தினருடன் சாந்தி வில்லியம்ஸ் வசித்து வந்தார்.
undefined
கடந்த 6ம் தேதி சந்தோஷ் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் அவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதற்கு இவர் அடிமையாகி விட்டதாகவும். தனது அறைக்குச் சென்று சந்தோஷ் காலை வெகுநேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறைக்கு சென்று சந்தேகம் அவர் படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார் என்றும் கூறப்பட்டது.
undefined
தற்போது தனது மகன் மரணம் குறித்து சாந்தி வில்லியம்ஸ் மனம் திறந்துள்ளார். என் மகனுக்கும் பிறரைப் போல் குடிப்பழக்கம், புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தது உண்மை தான். கடந்த சனிக்கிழமை எனது பேத்தியோடு வீட்டில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் சென்றுள்ளான்.
undefined
இடையில் ஏதோ மாதிரி இருந்ததால் வீட்டிற்கு வந்து பேத்தியை விட்டு, விட்டு தனது அறையில் சென்று படுத்துள்ளான் .அவனுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட எழுத கை வலிக்கிறது என்று என்னிடம் சொன்னான் அதுக்குள்ள இப்படி ஆகிவிட்டது.
undefined
ஆனால் சிலரோ குடும்ப பிரச்சனை, மர்ம மரணம் என்றொல்லாம் செய்தி வெளியிடுகிறார்கள். சந்தோஷ் மனைவி அவனை விட்டு போய் 4 வருடம் ஆகிறது. அவள் எங்கு இருக்கிறாள் என்று கூட எங்களுக்கு தெரியாது. ஆனால் அவன் சந்தோஷமாக தான் இருந்தான் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
undefined
click me!