இதுவே முதல் முறை... 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!

First Published Dec 28, 2020, 2:08 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு குடும்பத்தின் பாசத்தை போற்றும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.
 

வானத்தை போல, ஆனாந்தம், போன்ற அண்ணன் தம்பிகள் பாச கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு இந்த சீரியலுக்கும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
undefined
மற்ற சீரியல் கதைகள் போல், வில்லி, கொலை, போலீஸ், விறுவிறுப்பு, பரபரப்பு, நயவஞ்சகம் போன்ற கோணத்தில் கொண்டு செல்லாமல் பாசத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து இந்த சீரியலை நகர்த்தி செல்லும் விதம் கூடுதல் சிறப்பு.
undefined
இந்த சீரியலுக்கு மட்டும் அல்ல, இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
undefined
அப்படி இந்த சீரியலில் முல்லையாக வாழ்ந்து, தற்கொலை செய்து கொண்டு மறைந்த நடிகை சித்ராவின் நினைவுகளில் இருந்து ரசிகர்கள் பலர் இன்னும் வெளியே வரவில்லை.
undefined
தற்போது சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில், 'பாரதி கண்ணம்மா' காவியா நடித்து வருவதும் உறுதியாகியுள்ளது.
undefined
இந்நிலையில் எந்த ஒரு தமிழ் சீரியலுக்கு கிடைக்காத தனி பெருமை, 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு கிடைத்துள்ளது.
undefined
இதுவரை ஹிந்தியில் இருந்து தான் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர்.
undefined
இதுகுறித்த போஸ்டர் ஒன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்றே கூறலாம் .
undefined
click me!