இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வெகு பிரம்மாண்டமாக கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டிகள் நடைபெற்று முடிந்தது. அந்த மாநாடு நடந்து முடிந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது என்றாலும் கூட, இன்றளவும் அந்த மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து அவர் பேசிய விஷயங்கள் பெரும் அதிர்வலைகளை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தான் ஏற்கனவே அரசியல் தலைவர் விஜயை ஆதரித்து வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகிய இருவரும் இப்போது அவரை மிகப் பெரிய அளவில் எதிர்த்து வருகின்றனர்.