நேற்று ரவீந்தர், இன்று தீபக் - BB வீட்டில் பாய்ஸ் டீமுக்கு மாறி மாறி காலில் நடக்கும் சம்பவம்!

Ansgar R |  
Published : Oct 09, 2024, 12:20 AM IST

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் வீட்டில் அடுத்தது பாய்ஸ் டீமில் உள்ள போட்டியாளர்களுக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டு வருகின்றது.

PREV
14
நேற்று ரவீந்தர், இன்று தீபக் - BB வீட்டில் பாய்ஸ் டீமுக்கு மாறி மாறி காலில் நடக்கும் சம்பவம்!
Vijaysethupathi

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 3 நாட்கள் கடந்துள்ள நிலையில், ஒரு போட்டியாளர் (சச்சனா நமிதாஸ்) முதல் நாளிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் எப்போதுமே பிக் பாஸ் என்றால் "எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என்பது தான் தரகமந்திரம் என்பதால் நடக்கும் அனைத்தையும் ரசிகர்கள் பொறுமையுடன் பார்த்து வருகின்றனர்.

ஒவ்வொரு சீனும் மிரட்டல்; நடுநடுங்க வைக்கும் டாப் 11 சைக்கோ திரில்லர் படங்கள் - இந்த வாரம் OTTயில் பார்க்கலாம்!

24
Sachana Namidas

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டதிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என்று அணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. கோதாவரி வீட்டுக்கு நடுவுல கோட்ட போடுடி.. என்பது போல BB வீட்டுக்கு இடையே கோடு போடப்பட்டுள்ளது. பெண்கள் அணியில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேடாகி வெளியே சென்றுள்ள சூழலில், இப்பொது 8 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் என்கின்ற விகிதத்தில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் பயணித்து வருகின்றனர்.

34
Pavithra

இந்நிலையில் ஆண்கள் அணியில் அனைவரும் ஒன்றாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை வெற்றிகரமாக முடித்து வரும் நிலையில், பெண்கள் அணி இரண்டாக உடைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் தொகுப்பாளினி ஜாக்குலின் மற்றும் சின்னத்திரை சீரியல் நடிகை பவித்ரா ஜனனி ஆகிய இருவரிடம் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இடையே நுழைந்த சுனிதா, ஜாக்குலினை நோட்ஸ் கட் பண்ணி அனுப்பியது நாம் அனைவரும் அறிந்ததே. 

44
Bigg Boss House

இந்த சூழலில் நேற்று "நாற்காலி.. யார் காலி" என்கின்ற தலைப்பில் பிக் பாஸ் ஒரு வித்தியாசமான டாஸ்கை கொடுத்திருந்தார். இந்த டாஸ்கில் விளையாடிய தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ரவீந்தர் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. அவரால் எழுந்து நடக்க கூட முடியாத நிலையில், அவருடைய சக போட்டியாளர்கள் அவரை தாங்கிக் கொண்டு தான் நடக்க வைத்தனர். அதன்பிறகு மருத்துவரிடம் சென்று திரும்பிய ரவீந்தர், தற்பொழுது ஓய்வெடுத்து வந்தாலும், அவரால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியுமா? என்கின்ற சந்தேகங்கள் எழுந்திருக்கிறது. 

இந்த சூழலில் அதே போட்டியில் பங்கேற்ற விஜய் டிவியின் மூத்த தொகுப்பாளர் தீபத்திற்கும் அதேபோல காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது காலில் கட்டுடன் அவரும் பயணித்து வரும் வீடியோகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் இனி BB வீட்டில் உடல்ரீதியான டாஸ்குகளை பிக் பாஸ் கொஞ்சம் பார்த்து தான் கொடுப்பார் போல.

Ravinder Chandrasekar:15 ஆண்டுகளுக்கு பிறகு ஓடியதால் வந்த பிரச்சனை – நடக்க முடியாமல் அவதிபட காரணமே இது தானாம்!  

Read more Photos on
click me!

Recommended Stories