ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொன்னது குத்தமா? நடிகர் விஜய்யை நெட்டிசன்கள் வறுத்தெடுப்பது ஏன்?

First Published Sep 15, 2024, 11:57 AM IST

Netizens Troll Vijay : நடிகர் விஜய் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதை நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

Netizens Troll Vijay

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் கோட் படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்க உள்ள கடைசி திரைப்படமான தளபதி 69 படம் குறித்த அறிவிப்பும் நேற்று வெளியானது. இப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

TVK Vijay

தளபதி 69 படத்தோடு சினிமாவை விட்டு விலக உள்ளார் நடிகர் விஜய். அவரின் கடைசி படம் இது என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தளபதி 69 படத்தை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வர உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இப்படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் இறங்க உள்ளார் விஜய். இதற்காக தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியையும் இந்த ஆண்டு தொடங்கினார்.

இதையும் படியுங்கள்... தனியா வரச்சொன்னார்; என்ன பார்த்ததும் வேர்த்து கொட்டீருச்சு - வைரமுத்துவின் லீலைகளை அவிழ்த்துவிட்ட சுசித்ரா

Latest Videos


Vijay Onam Wishes

தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ள விஜய், அதற்கான பணிகளையும் சைடு கேப்பில் செய்து வருகிறார். அண்மையில் இக்கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. அதில் கட்சி கொடியையும், கட்சிப் பாடலையும் அறிமுகம் செய்துவைத்தார் விஜய். விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே ஏதேனும் பண்டிகைகள் வந்தால் அதற்கு வாழ்த்து சொல்லி எக்ஸ் தளத்தில் பதிவிடும் விஜய், விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு போன்ற தமிழகர்களின் முக்கிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில், இன்று மலையாளிகளின் முதன்மை பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்!' என குறிப்பிட்டு உள்ளார்.

Thalapathy Vijay

நடிகர் விஜய்க்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருப்பதால் அவர் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் பிரதான பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றிற்கு அவர் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்திக்கு உங்களிடம் இருந்து ஒரு வாழ்த்து செய்தி வரவில்லை ஒரு ரசிகனாகவும் கழகத்தின் தொண்டனாகவும் இது வருத்தம் அளிக்கக்கூடிய செயலாக உள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து தரப்பு விழாக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் ரசிகரே தன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் இருந்தபடி... இசைக்கருவிகள் இன்றி இளையராஜா இசையமைத்த சூப்பர் ஹிட் பாட்டு - அடடே இதுவா?

click me!