
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஜய் டிவியில் துவங்கப்பட்ட சீரியல் 'நீ நான் காதல்'. ரொமான்டிக் டிராமா ஜர்னரில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல்.. 'இஸ் பியார் கோ கியானா தூண்' என்கிற ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக்காக ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே இந்த ஹிந்தி சீரியல், தமிழில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து... தற்போது முழுக்க முழுக்க தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த சீரியலை ராஜன் சுந்தரம் என்பவர் இயக்கி வரும் நிலையில், பிரேம் ஜாக்கோப் கதாநாயகனாகவும், வர்ஷினி சுரேஷ் கதாநாயகி ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும் வி ஜே தனுஷிக் விஜயகுமார், அஸ்விதா ஸ்ரீதாஸ், சங்கரேஷ் குமார், நவீன் முரளிதரன், ஷீலா, தமிழ்ச்செல்வி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அன்று ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட சூரி; இன்று இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
விறுவிறுப்பான கதைகளத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், எப்போது அபி - ராகவ் ஒன்று சேர்வார்கள் என்பதே ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் ராகவ்வின் அக்காவாக, அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வி ஜே தனுஷிக் விஜயகுமார். இவருக்கும் தான் இப்போது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சீரியலில் ஹீரோ - ஹீரோயினுக்கு அடுத்தபடியாக அஞ்சலி கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக உள்ளது. இவருடைய கணவர்தான் தற்போது ஹீரோயின் அபியை எப்படியும் அடைந்தே தீர வேனுடம் என சபதம் போட்டு, ராகவ் மற்றும் அபியை பிரிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். இந்த சீரியலில் கர்ப்பிணியாக இருக்கும் தனுஷிக், ஒரு விஜே-வாக இருந்து தன்னுடைய கேரியரை துவங்கியவர்.
ஜி.வி.பிரகாஷுக்கு வலைவீசும் கமல் - எந்த படத்திற்காக தெரியுமா?
தமிழில் சில தொலைக்காட்சிகளில், ஆங்கரிங் செய்ய துவங்குவதற்கு முன்பே, ஸ்ரீலங்கன் தொலைக்காட்சிகள் தான் பணியாற்றினார். பார்ப்பதற்கு மார்டன் பெண்ணாக தெரிந்தாலும், இலங்கை தமிழில் மிகவும் அழகாக பேசக் கூடியவர். இளம் வயதிலேயே ஆங்கரிங் துறையை தேர்வு செய்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்த துவங்கினார். மேலும் இலங்கை ஒரு சிறிய நாடு என்பதால், அவரால் குறிப்பிட்ட தன்னுடைய திறமையை வளர்த்து கொண்ட இந்தியா வர முடிவு செய்தார்.
இவருக்கு தமிழகத்தில் இருந்த சில நண்பர்கள் உதவுவதாக கூறிய வார்த்தையை நம்பி இந்து வந்தார். ஆனால் இவர் நம்பிய நண்பர்கள் அனைவரும் இவரை நடுத்தெருவில் தான் நிறுத்தினர். இவர் இலங்கையில் பணியாற்றிய தொலைக்காட்சியின் பாஸ் தான் தன்னுடைய நண்பர்கள் மூலம் உதவி செய்துள்ளார். உணவு மற்றும் பணம் என பல்வேறு வகையில் சுமார் 9 மாதங்கள் அந்த நபரின் தோழி தான் இவரை கவனித்து கொண்டாராம். பின்னர் தமிழ் தொலைக்காட்சிகளில் விஜே மற்றும் சீரியல் வாய்ப்பு தேட துவங்கினார்.
தன்னுடைய கடுமையான காலங்களை கடந்து தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'நீ நான் காதல்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு தான் திருமணம் நடைபெற உள்ளது. சில நாட்களுக்கு முன்பு இவருடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இது குறித்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
யாருக்கும் தெரியாமல் சமுத்திரக்கனி செய்து வரும் நல்ல விஷயங்கள் என்ன தெரியுமா?