2015 ஆம் ஆண்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க துவங்கிய போது, இருவருக்கு இடையிலும் பற்றிய காதல் தீ, தற்போது வரை கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.
undefined
சமீபத்தில் 5 ஆண்டு காதல் நிறைவடைத்ததை கூட இந்த ஜோடி கொண்டாடி மகிழ்ந்தது.
undefined
அதே போல் கொரோனா நேரத்தில் கூட, ஓணம் பண்டிகையை கொண்டாட, இருவரும் தனி விமானம் மூலம் கொச்சிக்கு பறந்தனர்.
undefined
ஓணம் பண்டிகையை கொண்டாடிய பின், தன்னுடைய அம்மா மற்றும் காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக கோவாவை முகாமிட்டது இந்த ஜோடி.
undefined
மேலும் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளதால், மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்துள்ளது. நயன்தாரா சமீபத்தில் மலையாள படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலாக பரவியது.
undefined
அதே போல், விக்னேஷ் சிவனும் அடுத்ததாக தான் இயக்க உள்ள, 'காத்து வாக்குல இரண்டு காதல்' படத்தின் பணியில் பிசியாக இருப்பதாக கூறப்பட்டது.
undefined
இந்நிலையில், தீபாவளி ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிக் ஏற்றியுள்ளார் நயன்தாரா.
undefined
கருப்பு நிற உடையில் நெற்றியொரு நெற்றி ஒட்டி, இறுக்கமாக கட்டி பிடித்து உள்ள செம்ம ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
undefined