சுரேஷ் சக்கரவர்த்தி என்ன இப்படி சொல்லிட்டாரு?... அப்ப மறுபடியும் ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு...!

First Published Nov 12, 2020, 9:08 PM IST

இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். 

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஏற்கனவே நடிகை ரேகா, பாடகர் வேல்முருகன் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக விஜே அர்ச்சனாவும், பாடகி சுசித்ராவும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.
undefined
கடந்த ஞாயிற்றுக்கிழமையின் போது பிக்பாஸ் வீட்டிலிருந்து கட்டாயம் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால் அது நம்ம சுரேஷ் தாத்தாவாக இருக்க கூடாது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
undefined
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினர்.
undefined
பிக்பாஸ் வீட்டிற்குள் பல பிரச்சனைகளை கொளுத்தி போட்டு, அனிதா , சனத்துடன் சண்டை போட்டு என கன்டென்ட் கொடுப்பவராக அவர் மட்டுமே இருந்தார்.
undefined
இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியதால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த சுரேஷ் சக்கரவர்த்தியிடம் வைல்ட் கார்டு மூலமாக மீண்டும் உள்ளே வாருங்கள் என அழைத்தனர்.
undefined
அதற்கு அவரோ 'இந்த வைல்ட் அனிமல்ஸ் இடம் இருந்து தப்பித்தது பெரிய விஷயம்' என கூறினார். இதனால் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல மாட்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
undefined
ஆனால் யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், வனிதா போல் தனக்கும் வைல்ட் கார்டு மூலமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போவேன் என்றும், அப்படி போனால் மற்ற போட்டியாளர்களை வச்சி செய்யப்போறதாகவும் கூறியுள்ளார்.
undefined
என்ன சுரேஷ் தாத்தா இப்படி மாத்தி மாத்தி பேசுறார் என ரசிகர்கள் கொஞ்சம் அப்செட் ஆனாலும். நமக்கு மறுபடியும் ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் காத்துக்கிட்டு இருக்குன்னு குஷியாகியுள்ளனர்.
undefined
click me!