கோலிவுட்டில் கொண்டாடப்பட்ட குறிப்பிடத்தக்க காதல் ஜோடிகளில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் அடங்குவர். பேச்சுவாக்கில் மலர்ந்த இவர்களது காதல் காத்துவாக்குல வளர்ந்து இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளது. இன்று காலை 8:30 மணியளவில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமணம் நடைபெற்றது.
தென்னிந்திய திரையுலகின் முக்கியமான நடிகை என்பதால் நடிகை நயன் தாராவின் திருமணத்திற்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதுதவிர சமூக வலைதளங்களிலும் திரும்பிய பக்கமெல்லாம் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
திருமண நாளில் பிசியான வேலையிலும் நடிகை நயன்தாரா சமூக அக்கறையுடன் செய்துள்ள ஒரு செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அது என்னவெனில், நடிகை நயன்தாரா, தனது திருமணத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.