Sushant Singh :2 ஆண்டுகள் ஆகியும் விலகாத மர்மம்! ‘ரீல் தோனி’ சுஷாந்த் சிங்கின் நினைவுநாளில் கலங்கும் ரசிகர்கள்

First Published Jun 14, 2022, 10:32 AM IST

Sushant Singh Rajput : நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு நாளான இன்று ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங். இவர் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி என்கிற படத்தில் தோனியின் கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள குடியிருப்பில் இருந்து தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தற்கொலை அல்ல கொலை என ரசிகர்களும், சுஷாந்த் சிங்கின் உறவினர்களும் குற்றம்சாட்டினர். பாலிவுட்டில் உள்ள வாரிசு நடிகர்கள் தான் சுஷாந்தின் தற்கொலைக்கு காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது.

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை போலீஸ், பீகார் போலீஸ், அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சிபிஐ என 5 அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும் இதுவரை அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது மர்மமாகவே உள்ளது. 

இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது. அவரது நினைவு நாளான இன்று ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுதவிர டுவிட்டரில் அவரது பெயருடன் கூடிய ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  Director Nelson :நான் ஆல்ரெடி மாட்டிகிட்டு இருக்கேன், ஆளவிடுங்க.. கேலி, கிண்டல்கள் குறித்து மனம்திறந்த நெல்சன்

click me!