என் நண்பர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது... மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தென்னிந்திய பிரபலங்கள்...!

First Published Apr 1, 2021, 6:46 PM IST

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் பலரும் ரஜினிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். 
 

ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பரான கமல் ஹாசன் ‘உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்’ என வாழ்த்து கூறியுள்ளார்.
undefined
நடிகர் மம்மூட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “தாதாசாகேப் பால்கே விருது பெரும் சூர்யாவுக்கு வாழ்த்துக்கள்.அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார்.
undefined
தகுதியான அங்கீகாரம், தாதா சாகேப் பால்வே விருதுக்கு அன்பான வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் சார் என மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன் லால் பதிவிட்டுள்ளார்.
undefined
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மோகன் பாபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “என் நண்பர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்வே விருது ! அது தான் என் நண்பர் ! அவர் இன்னும் பல விருதுகளுக்கு தகுதியானவர்! எனக்கு பெருமையான தருணம்!!!!!” என பதிவிட்டுள்ளார்.
undefined
மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்வே விருது என் அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திரைத்துறையில் உங்கள் பங்களிப்புகள் மகத்தானவை, அளவிடமுடியாதவை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா!!# என பதிவிட்டுள்ளார்.
undefined
நடிகர் சரத்குமார் “இந்திய திரைப்படத்துறையில் சாதனை புரிந்தோருக்கான மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது #DadasahebPhalkeAward அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
undefined
“லட்சக்கணக்கானவர்களை ஊக்குப்படுத்திய மனிதருக்கு... வாழ்க்கையின் அனைத்து தடைகளையும் தாண்டி மேல வர என்னைத் தூண்டிய மனிதருக்கு... இந்த மரியாதைக்குரிய தாதாசாகேப் பால்கே விருதுக்கு தகுதியான மனிதருக்கு... உங்களை நேசிக்கிறேன், நீங்கள் செய்த அனைத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன் தலைவா” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், நடிகருமான சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
undefined
click me!