"கொறஞ்சது 1.5 வருஷமாகும்" பிரம்மாண்ட ஹிஸ்டாரிக் படம்.. ரெடியாகும் மாரி செல்வராஜ் - ஹீரோ யார் தெரியுமா?

First Published Sep 29, 2024, 4:35 PM IST

Mari Selvaraj : பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் தனது கனவு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது ஒரு வரலாற்று சம்பந்தமான திரைப்படமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

Mari Selvaraj

திருநெல்வேலியில் பிறந்து இப்போது தமிழ் திரையுலகில் மெகா ஹிட் இயக்குனராக மாறியிருக்கிறார் மாரி செல்வராஜ் என்றால் அது மிகையல்ல. இளம் வயதில் இருந்த தனது கிராமத்தில் அவர் அனுபவித்த பல வேதனைகளை தான் அவர் இப்பொது படமாக எடுத்து வருவதாக மாரி செல்வராஜே பல மேடைகளில் தெரிவித்துள்ளார். 

பிரபல இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ். ஜீவா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "கற்றது தமிழ்" என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரமும் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் பணியாற்றி வந்த அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய "பரியேறும் பெருமாள்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு சம்பளத்தை அள்ளிக்கொடுத்த கமல் - அதுவும் இத்தனை கோடியா?

Karnan Movie

உண்மையில் பல முன்னணி இயக்குனர்கள் இந்த திரைப்படத்தின் கதையை வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மூத்த இயக்குனர் பாரதிராஜா, மாரி செல்வராஜ் எதிர்காலத்தில் மிகச்சிறந்த இயக்குனராக வரப்போகிறார் என்று அப்போதே கணித்திருந்தார். இந்த சூழலில் சுமார் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "கர்ணன்". பரியேறும் பெருமாள் படத்தை விட 5 மடங்கு மாபெரும் வெற்றி பெற்று மாரி செல்வராஜுக்கு மெகா ஹிட் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கர்ணன். 

இந்த சூழலில் தான் உதயநிதி ஸ்டாலினோடு மாரி செல்வராஜ் இணைந்தார். அதுவரை தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவை யாருமே பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மிகப்பெரிய பாராட்டுகளுக்கு உரித்தானவரானார் மாரி செல்வராஜ். அதன் பிறகு அண்மையில் வெளியான அவருடைய "வாழை" திரைப்படம் இப்போது வரை மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Latest Videos


Rajinikanth

குறிப்பாக வாழை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், மாரி செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். விரைவில் அவரோடு இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மாரி செல்வராஜே ஒரு மேடையில் மகிழ்ச்சியோடு பேசியிருந்தார்.

Dhanush

தற்பொழுது பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்து வரும் "பைசன்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கி வரும் நிலையில், அண்மையில் அவர் பங்கேற்ற ஒரு பேட்டியில் தன்னுடைய கனவு திரைப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படத்தை எடுக்க தான் முயற்சித்து வருவதாகவும். அந்த படத்தை எடுத்து முடிக்கவே குறைந்தபட்சம் ஒன்றரை வருடங்கள் தேவைப்படும் என்றும் கூறியிருக்கிறார். 

மேலும் அந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிகர் தனுசுடன் தான் இணைய உள்ளதாகவும் கூறி இருக்கிறார் மாரி செல்வராஜ். இது என்ன கதைக்களம், தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் கோர்வை தான் இந்த படமா? என்பது குறித்து எந்த தகவலையும் மாரி செல்வராஜ் கூறவில்லை. ஆனால் ஒரு பெரிய பட்ஜெட் வரலாற்று திரைப்படம் இது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மேலும் அந்த படத்திற்காக சில ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறியுள்ளார் அவர்.

அப்போ ரூட்டு தல; இப்போ கெத்து! அஜித் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யாரென்று தெரிகிறதா?

click me!