மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசான திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் மணிரத்னம். இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் சாதனை நிகழ்த்தியது.