மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நித்யா சசி. 32 வயதாகும் இவர், திருவனந்தபுரத்தில் வசித்து வரும் 75 வயது முதியவரிடம் வாடகைக்கு வீடு கேட்டு போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். பின்னர் அடிக்கடி இதுதொடர்பாக முதியவரின் வீட்டுக்கும் சென்றுள்ள நித்யா சசி, அவருடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். பின்னர் ஒரு நாள் தனது நண்பர் பினு என்பவரையும் முதியவரின் வீட்டுக்கு அழைத்து சென்ற நித்யா, முதியவரை நிர்வாணமாக்கி அவரை தனது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.