சனோஜ் மிஸ்ரா மீதான வழக்கு என்ன?
சினிமாவில் வாய்ப்பு கொடுப்பதாக கூறி, ஒரு கிராமத்து பெண்ணை நகரத்திற்கு வரவழைத்து, இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவரது வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இவர் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பல ஹோட்டல்களுக்கு தன்னை வரவைத்து, பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார் என்று புகார் அளித்துள்ளார். மேலும், இதன் காரணமாக பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சில ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.