பின்னர் என்ன பாடல் எழுதியிருக்கிறார் என வித்யாசாகர் கேட்க, பல்லாங்குழி பாடலை சொல்லி இருக்கிறார் லிங்குசாமி, உடனே பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்னு ஒரு பாட்டு இருக்கா என கேட்டிருக்கிறார் வித்யாசாகர். அந்த காலகட்டத்தில் டிரெண்டிங் சாங்காக அது இருந்த நிலையில், அதையே தெரியவில்லை என்று சொல்கிறாரே என அப்செட் ஆன யுகபாரதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பின்னர் பல்லாங்குழி வட்டமாக இருக்கும் அதுஎப்படி ஒரு ரூபாய் உடன் பொறுத்திப் பார்க்க முடியும், உவமைக்கு கூட இது சரியா வராதே என வித்யாசாகர் சொல்ல, உடனே பதிலுக்கு நிலா முகம்னு எழுதுறாங்க, அப்போ நிலா மாதிரியா முகம் இருக்கும்; தாமரை முகம்னா தாமரை போன்று செதில் செதிலாவா மூஞ்சி இருக்கும் எல்லாம் ஒரு உவமைக்கு சொல்றது தான், என யுகபாரதி சொல்லி இருக்கிறார். இதனால் டென்ஷன் ஆன வித்யாசாகர் இந்த பையன் தான் பாட்டு எழுதனுமா என லிங்குசாமியிடம் கேட்டிருக்கிறார். அருகில் இருந்த யுகபாரதி, இவருக்கு நான் பாடல் எழுதுவது பிடிக்கல சார் அதான் இப்படி பேசுகிறார் என்று ஓப்பனாகவே சொல்லி இருக்கிறார்.
பின்னர் லிங்குசாமியிடம் என்ன சூழலுக்கு பாட்டு வேணும் என வித்யாசாகர் கேட்க, அதற்கு லிங்குசாமி, காதலன் காதலிக்கு கடிதம் கொடுப்பது போன்ற சூழல்ல பாட்டு வேண்டும் என கேட்டவுடன், இந்த பையன் எழுதுன லெட்டரை போய் கொடுக்க கூட தகுதி இல்லாதது மாதிரி இருக்கான். இவன் எப்படி லவ் லெட்டர் மாதிரி பாட்டு எழுதுவான் என கேட்டு யுகபாரதியை டேமேஜ் செய்திருக்கிறார் வித்யாசாகர்.
இதையும் படியுங்கள்... தலைமறைவான பாடகர் மனோ மகன்கள்; காரணம் என்ன?