இதையடுத்து போலீசை கண்டவுடன் ரபிக் உள்பட, தகராறில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்ற நிலையில், கிருபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற கிருபாகரன், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று, புகார் அளித்த நிலையில், பாடகர் மனோவின் மகன் ரபிக் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து விசாரணைக்காக மனோ வீட்டிற்கு போலீசார் செல்ல, ரபிக் மற்றும் சாகீர் தலைமறைவானது தெரியவந்தது. பின்னர் மனோ வீட்டில் வேலை பார்த்தவர்களும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுமான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாடகர் மனோவின் மகன் குடிபோதையில் அப்பாவி இளைஞரை அடித்து உதைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருள் ஆகி உள்ளது.