இதற்கு விளக்கமளித்து டுவிட்டரில் அவர் போட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : “பரவி வரும் என்னுடைய பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் பல விஷயம் மாறும் என்பதால் என்னுடையை பேஸ்புக் பக்கத்தை Deactivate செய்து அதிலிருந்து விலகிவிட்டேன். விஷயங்களை மாற்ற முயற்சிக்கும் மக்கள் மீது எனக்கு கோபம் இல்லை அவர்களுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும். மக்கள் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை காட்டியதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
வைரலாக பரவும் பதிவுகளில் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகளுடன் கூடிய பதிவுகள் போலியானது. நான் தவறு செய்துவிட்டேன். வயதுக்கு ஏற்றவாறு நாம் அனைவரும் வளர்கிறோம், கற்றுக்கொள்கிறோம். நான் சரிசெய்ய முயற்சி செய்தேன். சிறந்த மனிதனாக மாற நான் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்து வருகிறேன்” என உருக்கமாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் பிரதீப்.
இதையும் படியுங்கள்... பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் ‘லவ் டுடே’ படத்தின் 12 நாள் வசூல் நிலவரம்